மணல் கடத்தல்- திமுகவினர் அட்டூழியம்:!
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏராளமான ஆற்றுப் படுகைகளிலிருந்து எந்த அனுமதியும் இல்லாமல் மணல் கடத்தல் வெகு ஜோராய் நடைபெற்று வருகிறது.
தாமிரபரணி உள்ளிட்ட பல நதிகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கனக்கான லாரிகளில் அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு மணல் கடத்தல் நடந்து வருகிறது.
இந்த கடத்தலை தடுக்க அரசு உத்தரவிட்டது. இதுவரை இந்த கடத்தலை தடுக்கும் பணியில் வருவாய் துறையினர் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். இப்போது காவல் துறையும் இந்த வேலையில் இறங்கியுள்ளது.
இதால் காவல்துறைக்கும்-கரை வேட்டிகளுக்கும் இடையே அக்கப் போர் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் வாசுதேவநல்லூர் குலசேகரிகுளம் பகுதியில் திமுகவினர் ஒரு லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.
அப்போது போலீசார் அங்கு சென்று லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு வருமாறு கூறிள்ளனர்.
இந்த லாரி யாருடையது தெரியுமா, திமுக ஒன்றிய செயலாளர் முத்தையா பாண்டியனுக்கு சொந்தமானது என்று கூறி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரை தாக்கவும் முயன்றனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவே போலீஸார் பெரும் எண்ணிக்கையில் அங்கு வந்து திமுகவினர் 6 பேரையும் கைது செய்தனர்.
லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. ஓன்றிய செயலாளர் முத்தையா பாண்டியன் உள்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர். இச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மணல் கொள்ளையில் அதிமுகவினர் மட்டுமல்ல திமுகவினரும் ஈடுபட்டுள்ளனர் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.












Click it and Unblock the Notifications