மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்

Subscribe to Oneindia Tamil

ஜோத்பூர்:தொடர்ந்து படிக்க விரும்புவதாக கூறிய மகளை, கழுத்தை நெரித்துக் கொலை செய்தார் கொடூரத் தாய்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம், உதய்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் தபு தேவி. இவரது மகள் பூசா (12). 5ம் வகுப்பு படித்து வந்த பூசா சமீபத்தில் இறுதித் தேர்வில் பாஸ் செய்தார். தொடர்ந்து படிக்கவும் விரும்பினார்.

இதை தனது தாயிடம் சொன்னார். ஆனால் படித்தது போதும், என்னுடன் வீட்டிலேயே இருந்து கூட மாட ஒத்தாசையாக இரு, வயல் வேலைகளில் எனக்கு உதவு என்று கூறியுள்ளார்.

ஆனால் நான் கண்டிப்பாக படிப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்றுள்ளார் பூசா. கடந்த 5ம் தேதியும் தனது தாயிடம் நான் தொடர்ந்து படிக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார் பூசா.

இதனால் ஆத்திரமடைந்த தபு தேவி, ஆத்திரத்தில் அறிவிழந்து பெற்ற குழந்தை என்று கூட பாராமல், கழுத்தை நெரித்து பூசாவைக் கொன்று விட்டார்.

பிறகு தான் தப்பிப்பதற்காக பூசா தற்கொலை செய்து கொண்டது போல காட்டி, அவரது வீட்டின் உத்தரத்தில், தூக்கில் தொங்க விட்டுள்ளார்.

போலீஸாரும் முதலில் தற்கொலை வழக்காகவே இதை பதிவு செய்தனர். ஆனால் விசாரணையில் தபுதேவிதான் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தற்போது தபு தேவியை போலீஸார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+