தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்- சிறுமி பலி
Subscribe to Oneindia Tamil
கரூர்:தமிழகத்தில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலுக்கு 6 வயது குழந்தை பலியாகியுள்ளது.
கருர் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்த மேலவிட்டுக்கட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் தூத்துக்குடியில் சுங்க அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜெயவர்தினி (6).
இந்தக் குழந்தை முசிறியை அடுத்த காட்டுப்புத்தூரில் அவரது தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்தது.
இக் குழந்தைக்கு சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த அச் சிறுமிக்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிறுமி இறந்துவிட்டாள்.












Click it and Unblock the Notifications