மலேசியா: இந்து கணவருடன் குடும்பம் நடத்தமுஸ்லீம் பெண்ணுக்கு தடை
கோலாலம்பூர்:இந்து சமூகத்தைச் சேர்ந்த நபரை கல்யாணம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட முஸ்லீம் பெண் ஒரு வழியாக சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார்.
இருப்பினும் அவரது கல்யாணம் செல்லாது, கணவருடன் அவர் சேர்ந்து வாழக் கூடாது என மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவில் இஸ்லாமியர்கள், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்ய முடியாது. அது சட்டப்படி குற்றமாகும்.
இந் நிலையில், இந்தியாவைப் பூர்விமாகக் கொண்ட நஜீரா பர்வீன்லி முகம்மது ஜலாலி என்பவர், மலேசியாவைச் சேர்ந்த மகேந்திரன் சபாபதி (25) என்ற இந்து வாலிபரைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது வீட்டை கடந்த ஏப்ரல் மாதம் மலேசிய போலீஸார் முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். இந்து வாலிபருடன் சட்டவிரோதமாக சேர்ந்து வாழ்வதாக கூறி நஜீரா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து கடந்த நான்கு மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்தார் நஜீரா. இவருக்காக கர்பால் சிங் என்ற வக்கீல், செலாங்கூர் மாநில நீதிமன்றத்தில் வாதாடினார்.
வழக்கின் இறுதியில், இவர்களது திருமணம் செல்லாது, நஜீரா, மகேந்திரனுடன் சேர்ந்து வாழக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டு, நஜீராவை விடுதலை செய்தது.
ஆனால் இந்தத் தீர்ப்பு மலேசியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாலிக் இம்தியாஸ் சர்வார் என்பவர் கூறுகையில், இப்படி உத்தரவிட சட்டத்தில் இடம் உள்ளதா என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட தீர்ப்பு எப்படி பிறப்பிக்கப்பட்டது என்று எனக்குப் புரியவில்லை.
நான் ஒரு முஸ்லீம் இல்லை என்று நஜீரா கோர்ட்டில் கூறியுள்ளார். அப்படி இருக்கையில் எப்படி முஸ்லீம் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரியவில்லை என்றார் அவர்.
நஜீரா தனது பெற்றோருடன்தான் சேர்ந்து வசிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் இஸ்லாம் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிய 29 வயதுப் பெண்ணை போலீஸார் கைது செய்து சித்திரவதை செய்த சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை ஆறு மாதங்கள் போலீஸார் சித்திரவதை செய்ததாக அவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.
இந்த நிலையில் இந்து வாலிபரைக் கல்யாணம் செய்து கொண்ட பெண்ணை குடும்பம் நடத்தக் கூடாது என்று கூறி மலேசிய நீதிமன்றம் பிரித்து வைத்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications