நிலத்தை பறித்து டாடா ஆலை அமைய வேண்டிய அவசியமில்லை: நல்லக்கண்ணு
திருநெல்வேலி:குடியிருப்பு பகுதிகளையும், விவசாய நிலங்களையும் பறித்துக் கொண்டுதான் தொழிற்சாலை கட்டாயம் அமைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொது குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் டாடாவின் டைட்டானியம் ஆலை அமைய உள்ள பகுதி மக்களை கடந்த இரு தினங்களாக சந்தித்து கருத்து கேட்ட நல்லகண்ணு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
![]() |
டைட்டானியம் ஆலை அமைய உள்ள பகுதிகளில் பல பண பயிர்கள் விவசாயம் செழித்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். அந்த பயிர்கள் மூலம் வரும் வருமானம் இழப்பு ஏற்படும் என்றும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இங்கு விளையும் பொருட்கள் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஆழ்துளை கிணறு, சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளனர். இயற்கை வளம் கொழித்திட மழை நீர் சேமிப்புக்கு ஆதாரமாக திகழும் தேரி நிலப்பகுதி நிலங்களை இழந்து விட்டால் தங்களது வாழ்வு நீர்மூலமாகி விடுமோ என்று அஞ்சும் அந்த மக்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி தொழிற்சாலை தொடங்க அரசு முன் வர வேண்டும்.
தேரி நிலப் பகுதிகளில் விவசாயம் மட்டுமே நடந்து வருகிறது. தொழிற்சாலைகள் இல்லை. கடலோரத்தில் மட்டுமே மணல் ஆலைகள் இயங்கி வருகின்றன.
குடியிருப்பு பகுதிகளையும், விவசாய நிலங்களையும் பறித்துக் கொண்டுதான் தொழிற்சாலை கட்டாயம் அமைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்றார்.













Click it and Unblock the Notifications