தஸ்லீமா தாக்குதல் - ஆற்காடு இளவரசர் கண்டனம்
சென்னை:வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ் ரீன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத் பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு பேட்டி அளிக்க வந்திருந்த தஸ்லீமாவை, மஜ்லிஸ் இ இட்டாகத்துல் முஸ்லிமீன் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் தாக்கிய சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
தஸ்லீமாவின் கருத்துக்களில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அப்படி இருந்தால் அவருடன் எழுத்துப் பூர்வமாகத்தான் வாதம் புரிய வேண்டுமே தவிர, உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபட்டது தவறானது. இதை நபிகள் போதிக்கவில்லை.
ஒரு உண்மையான முஸ்லீம், மத கட்டுப்பாட்டை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். எந்தவிதமான வன்முறையிலும் அவன் ஈடுபடக் கூடாது. அப்படி செய்தால் அது இஸ்லாமுக்கு விரோதமானது என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications