ஸ்தம்பித்த தூத்துக்குடி துறைமுகம்:தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்
தூத்துக்குடி:தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் சரக்குரகளை கையாளும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து 57,000 டன் நிலக்கரியுடன் மாபெரும் சரக்கு கப்பல் நேற்று தூத்துக்குடி வந்தது. ஆனால், துறைமுகத்துக்குள் 40,000 டன் கொள்ளவு கொண்ட கப்பல்கள் மட்டுமே நுழைய முடியும்.
இதனால் அந்தக் கப்பல் துறைமுகத்தின் வெளியே நிறுத்தப்பட்டு, அதிலிருந்த சிறிய கப்பல் மூலமாக நிலக்கரி பகுதி பகுதியாகக் கொண்டு வரப்பட்டது.
இந்தப் பணியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஒப்பந்தத் ெதாழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த துறைமுக சரக்கு கையாளும் பிரிவின் தொழிலாளர்கள், திடீரென வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.
இரண்டு மணி நேரம் நீடித்த அவர்களது போராட்டத்தால் சரக்குகளை கையாளும் பணி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து துறைமுக அதிகாரிகள் தொழிற்சங்கத்தினருடன் பேச்சு நடத்தினர்.
அதில் அனைத்து சரக்குகளையும் துறைமுக தொழிலாளர்களைக் ெகாண்டே கையாளவும், ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த மாட்டோம் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.












Click it and Unblock the Notifications