தினகரன் தாக்குதல்: டிஎஸ்.பி. சஸ்பெண்ட்!
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை தினகரன் அலுவலகம் மீது திமுகவினர் நடத்திய கொலை வெறித் தாக்குதல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஊமச்சிக்குளம் டி.எஸ்.பி. ராஜாராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
![]() |
மதுரை தினகரன் அலுவலகத்தில் கடந்த மே 9ம் தேதி மு.க.அழகிரி ஆதரவு திமுகவினர் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. விசாரணையின் இறுதியில், 17 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இதில் 17வது குற்றவாளியாக டி.எஸ்.பி. ராஜாராம் சேர்க்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது டி.எஸ்.பி. ராஜாராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications