சந்தையில் சரிவு-ரூ.50000 கோடியை இழந்த ஐவர்
டெல்லி:பங்குச் சந்தையில் கடந்த இரு வாரங்களாக நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகள் காரணமாக அம்பானி சகோதரர்கள் உள்பட இந்தியாவின் ஐந்து பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ. 50,000 கோடி குறைந்துள்ளாம்.
கடந்த இரண்டு வாரங்களாக மும்பை பங்குச் சந்தை மற்றும் டெல்லியில் உள்ள தேசிய பங்குச் சந்தையில் (நிப்டி) ஏற்ற, இறக்கம் நிலவி வருகிறது. ஏற்றத்தை விட இறக்கம்தான் பல மடங்கு உள்ளது.
இது பெரும் பணக்காரர்களின் பணக் குவியலில் குளறுபடியை ஏற்படுத்தியுள்ளதாம். அதாவது, இந்தியாவின் முதல் ஐந்து இடத்தில் உள்ள பெரும் பணக்காரர்களான அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, சுனில் மிட்டல், ஆசிம் பிரேம்ஜி, குஷ்பால்சிங் ஆகியோரின் சொத்து மதிப்பு ரூ. 50,000 கோடி குறைந்துள்ளதாம்.
இவர்களில் முகேஷ் அம்பானிக்குத்தான் பெரும் அடியாம். அதாவது இவருக்கு மட்டும் ரூ. 13,000 கோடி குறைந்துள்ளதாம்.ஏற்பட்டு விட்டதாம்.
முகேஷின் சொத்து மதிப்பு கடந்த ஜூன் 26ம் தேதி வரை 40.5 பில்லியன் டாலராக இருந்தது. பங்குச்சந்தை மாற்றத்தால் ஆகஸ்ட் 10ம் தேதி நிலவரப்படி 37.9 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது.
இவருக்கு அடுத்த படியாக சகோதரர் அனில் அம்பானியும் தனது சொத்து மதிப்பில் அதிக வீழ்ச்சி கண்டுள்ளார். இதில் சுனில் மிட்டல், குஷல் பால்சிங், ஆசிம் பிரேம்ஜி ஆகியோருக்கு சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தாலும் அம்பானி சகோதரர்கள் அளவிற்கு வீழ்ச்சி இல்லையாம்.
கடந்த ஜூன் 26ம் தேதி வரை இந்த 5 பேரின் மொத்த சொத்து மதிப்பு 5 லட்சத்து 83 ஆயிரத்து 280 கோடியாக இருந்தது. ஆனால் அதற்கடுத்த இரு வாரங்களிலேயே 50 ஆயிரம் கோடி குறைந்துவிட்டது.












Click it and Unblock the Notifications