கோவை குண்டுவெடிப்பு-இன்று 12 பேருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
கோவை:கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மேலும் 12 பேருக்கு இன்று ஜாமீன் வழங்கி தனி நீதிமன்ற நீதிபதி உத்திரபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் மொத்தம் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 105 பேர் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தனர். இந்த மனுக்கள் மீது படிப்படியாக விசாரணை நடத்தப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 69 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று 24 பேரின் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. இதில் 12 பேருக்கு ஜாமீன் வழங்கினார் நீதிபதி.
இதன்மூலம் இந்த வழக்கில் மொத்தம் 81 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை இனிமேல் தான் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications