For Daily Alerts
Just In
தினமணி முன்னாள் ஆசிரியர் சம்பந்தம் மரணம்
சென்னை:தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 73.
ஆசிரியர் பொறுப்பில் இருந்து சில ஆண்டுகளாக விலகிய அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் அவர் இன்று காலை சென்னையில் தனது இல்லத்தில் மரணமடைந்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபராக தனது பணியைத் துவக்கிய அவர் பின்னர் தினமணி ஆசிரியரானார்.
அவர் விருப்பப்படி அவரது உடல் ராமகிருஷ்ணா மருத்துவ கல்லூரிக்கு தானமாக தரப்படவுள்ளது.
Comments
Story first published: Tuesday, August 14, 2007, 5:30 [IST]