அண்ணா பல்கலையில் செல்போனுக்கு ரூ.25,000 பைன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று துணைவேந்தர் விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளார் விஸ்வநாதன். தடையை மீறி பல மாணவர்கள் அதை பயன்படுத்தி வருகின்றனர்.
இந் நிலையில், இனிமேல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். செல்போனும் பறிமுதல் செய்யப்படும் என விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications