அணு குண்டு சோதனை நடத்தினால்ஒப்பந்தம் ரத்து: அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் அடுத்த நிமிடமே இந்தியாவுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள சிவில் அணு சக்தி ஒப்பந்தம் ரத்தாகி விடும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது.

அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனால் இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் காங்கிரஸ் கூட்டணி அரசு உறுதியாக உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு பாதகமான பல அம்சங்கள் இருப்பதாக பரவலாக கருத்து உள்ள நிலையில், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் உடனடியாக ஒப்பந்தம் முறிந்து விடும் என அமெரிக்கா திடீரென மிரட்டியுள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கார்மக் கூறுகையில், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் உடனடியாக ஒப்பந்தம் முறிவடைந்து விடும் என ஒப்பந்தத்தில் ஒரு அம்சம் உள்ளது.

அதேபோல அணு சோதனை நடத்தினால் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கிய அனைத்துப் பொருட்களும் திரும்பப் பெறப்படும் எனவும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது என்றார் மெக்கார்மக்.

அமெரிக்காவுடனான 123 அணு சக்தி ஒப்பந்தத்தில், இந்தியாவின் அணு குண்டுச் ேசாதனைக்கு எந்தவிதத் தடையும் இல்லை. அது நமது உரிமை. அதை நாம் அமெரிக்காவிடம் விட்டுக் கொடுக்கவில்லை என்று சமீபத்தில்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.

ஆனால் பிரதமரின் பேச்சில் சம்மட்டியால் அடிப்பது போல, அணு குண்டு சோதனை செய்தால், ஒப்பந்தம் ரத்து என பட்டவர்த்தனமாக அமெரிக்கா தெளிவாகத் தெரிவித்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+