சதாம் மகளைத் தேடும் இன்டர்போல்!
Subscribe to Oneindia Tamil
ரியாத்:தூக்கிலிட்டுக் கொல்லப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் மகள் ராகத் உசேனை, சர்வதேச போலீஸ் தேடி வருகிறது.
சர்வதேச காவல்துறை தேடிவரும் பட்டியலில் ராகத் உசேன் (38) பெயர் இடம் பெற்றுள்ளது. சதாமின் மூத்த மகள்தான் ராகத். இவர் தீவிரவாதத்திற்கு துணை போவதாக அறிவித்து அவரைத் தேடி வருகிறது இன்டர்போல்.
![]() |
இதுதொடர்பாக இன்டர்போல் ரெட் அலர்ட்டை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இது கைது வாரண்ட் அல்ல. மாறாக வெளிநாட்டு காவல்துறையினர் ராகத் இருப்பிடம் குறித்து அறிய வந்தால், அவரை சர்வதேச போலீஸாரிடம் ஒப்படைத்து ஈராக் நீதிமன்றத்தின் நிறுத்த உதவ வேண்டும் என இன்டர்போல் வெளியிட்டுள்ள ரெட் அலர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
ராகத் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ஜோர்டான் நாட்டில் வசித்து வருகிறார். சிறிய சதாம் என்றழைக்கப்படும் இவர் தனது தந்தை கைது செய்யப்பட்டதும் அதனை மிகவும் கடுமையாக எதிர்த்து வந்தார்.
ராகத், ஜோர்டான் மன்னரின் விருந்தினராக இருந்து வருகிறார். கடந்த வருடம் ஈராக் அரசு ராகத்தை ஒப்படைக்க கேட்டுக் கொண்டாலும் அதனை ஜோர்டான் மறுத்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.














Click it and Unblock the Notifications