ராமர் பாலத்தை அழிக்க சதி - வி.எச்.பி.
சென்னை: ராமேசுவரம் கடல் பகுதியில் இருக்கும் ராமர் பாலத்தை சேது சமுத்திர திட்ட பணிக்காக தகர்க்க மத்திய கப்பல் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதா விஷ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் மற்றும் ராமர் பால பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த குப்புராமு, கல்யாணராமன் ஆகியோர் கூறியதாவது,
ராமேசுவரம் கடல் பகுதியில் இருக்கும் ராமர் பாலம் இந்துக்களின் புனித சின்னமாக கருதப்பட்டு வருகிறது. இதனை இடிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதையும் மீறி இதுவரை 20 சதவீதம் ராமர் பாலம் இடிக்கப்பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை மணல்மேடு என்கிறார்கள். இப்போது அதை வெடிவைத்து தகர்க்க போகிறார்கள். இதனால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து சுற்றுப்புறசூழல் கடுமையாக பாதிக்கப்படும்.
மத்திய அரசு இந்துக்களின் புனித மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். தென் தமிழகத்தில் மணவாளக்குறிச்சி கடல் பகுதியில் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் தோரியம் உள்ளது. அதை வைத்து இப்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை போன்று 4 மடங்கு மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யலாம். எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து 400 வருடங்களுக்கு மின்சாரம் கிடைக்கும்.
ராமர் பாலத்தை இடிப்பதன் மூலம் இந்த பகுதியில் இருக்கும் தோரியம் நீரில் கரைந்துவிடும். இதனால் அணுமின் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை பிடித்துவிடும் என்று பயந்த அமெரிக்கா, ராமர் பாலத்தை இடிக்க மறைமுகமாக நாசா விண்வெளி மையத்தை வைத்து பொய்யான தகவலை சொல்லியுள்ளது.
சேது கால்வாய் அமைக்க எளிய மாற்று வழிகள் இருக்க அரசு பிடிவாதமாக இருப்பதன் மர்மம் புரியவில்லை. மக்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தி ராமர் பாலம் இடிக்கப்படுமானால் தக்க பாடம் கற்பிக்கப்படும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறோம் என்று அவர் கூறினார்கள்
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications