7500 வாக்காளர்கள் குறைந்ததற்காககட் ஆன திருவட்டார் தொகுதி!
திருவட்டார்:7,500 வாக்காளர்கள் குறைந்து போனதற்காக திருவட்டார் சட்டசபைத் தொகுதியை ரத்து செய்ததற்கு அத்தொகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்தில் பல தொகுதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் திருவட்டார் தொகுதியும் ஒன்று. இதற்கு அத்தொகுதி அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருவட்டார் தொகுதியை மீண்டும் வழங்கக் ேகாரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. பொதுமக்களின் ஆதரவை பெறுவதற்கு தொகுதி மீட்பு குழு அமைக்கப்பட்டது.
அதன் ஓருங்கிணைப்பாளர் அப்பு நடேசன் தலைமையில் வாகன பிரச்சார பயணம் பேச்சிப் பாறையிலிருந்து துவங்கியது. மணியன் குழி, திருந்திக்கரை, சக்கோடு பகுதிகளில் வாகன பிரசாரம் நடந்தது.
இது குறித்து போராட்ட குழுவினர் கூறும்போது, 7500 வாக்காளர்கள் குறைவு என்று காரணம் கூறி மிகப் பெரிய பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கொண்ட திருவட்டார் தொகுதியை நீக்கியது இத்தொகுதி மக்களுக்கு செய்த துரோகமாகும்.
இழந்த இத்தொகுதியை மீட்கும் வரை போராட்டம் ஓயாது என்றனர்.












Click it and Unblock the Notifications