சாய்பாபா காலில் விழுந்து வணங்கியபோதுமாரடைப்பில் தொழிலதிபர் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:புட்டபர்த்தி சாய்பாபாவை காலில் விழுந்து வணங்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மரணமடைந்தார்.
சென்னையைச் சேர்ந்தவர் ஜி.கே.ராமன் (76). சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றின் தலைவராக தற்போது இருந்து வந்தார்.
சாய்பாபாவின் தீவிர பக்தர் ராமன். இந்த நிலையில் புட்டபர்த்திக்குச் சென்ற ராமன், நேற்று பாபாவை தரிசித்தார். பாபாவின் காலடியில் விழுந்து வணங்கியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
பாபாவின் காலடியிலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். ராமனின் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications