கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டநெல்லை கல்லூரி மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:மோதல் காரணமாக நீக்கப்பட்ட மாணவர்களை சேர்க்கக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நெல்லையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

நெல்லையை அடுத்த பேட்டையில் உள்ள மதுரை திரவியம் பிள்ளை தாயுமானவர் இந்து கல்லூரியில் கடந்த மாதம் 11-ந் தேதி இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக கல்லூரி நிர்வாகம் இரு தரப்பையும் சேர்ந்த 11 மாணவர்களை நீக்கியது. பிரச்சனைக்கு முடிவு காணும் வகையில் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பேராசிரியர் நமச்சிவாயம் தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இதையடுத்து 5 மாணவர்கள் மீண்டும் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தங்களது தரப்பில் உள்ள மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்க கோரி இந்து கல்லூரியில் படிக்கும் ஒரு பிரிவு மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+