கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டநெல்லை கல்லூரி மாணவர்கள்
திருநெல்வேலி:மோதல் காரணமாக நீக்கப்பட்ட மாணவர்களை சேர்க்கக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நெல்லையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
நெல்லையை அடுத்த பேட்டையில் உள்ள மதுரை திரவியம் பிள்ளை தாயுமானவர் இந்து கல்லூரியில் கடந்த மாதம் 11-ந் தேதி இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதன் காரணமாக கல்லூரி நிர்வாகம் இரு தரப்பையும் சேர்ந்த 11 மாணவர்களை நீக்கியது. பிரச்சனைக்கு முடிவு காணும் வகையில் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பேராசிரியர் நமச்சிவாயம் தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து 5 மாணவர்கள் மீண்டும் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தங்களது தரப்பில் உள்ள மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்க கோரி இந்து கல்லூரியில் படிக்கும் ஒரு பிரிவு மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications