வடபழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்:5 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னையில் உள்ள புகழ் பெற்ற வட பழனி முருகன் கோவிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

Vadapalani

சென்னை வடபழனியில் உள்ள முருகன் திருத்தலம் புகழ் பெற்றதாகும். பழனி முருகன் கோவில் விக்கிரகம் போலவே இங்குள்ள முருகப் பெருமானின் சிலையும் உள்ளால் இந்தக் கோவில் வடபழனி என்று அழைக்கப்படுகிறது.

இங்கு 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடந்து வந்தன.

Vadapalani

இன்று காலை சரியாக 9 மணிக்கு கோவில் கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தைக் காண கூடியிருந்த 5 லட்சம் பக்தர்களும் முருகப் பெருமானை வழிபட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

Vadapalani

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+