முகர்ஜி நாளையுடன் ஓய்வு - ராஜேந்திரன் புதிய டிஜிபி
சென்னை:தமிழக காவல்துறை தலைவர் டி.முகர்ஜி நாளையுடன் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டிஜிபியாக பி.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
![]() |
தமிழக காவல்துறைத் தலைவராக தற்போது செயல்பட்டு வரும் முகர்ஜியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய டிஜிபியாக, தற்போது தமிழக அரசின் சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக உள்ள பி.ராஜேந்திரன் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான உத்தரவை உள்துறைச் செயலாளர் மாலதி பிறப்பித்துள்ளார். 1973ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜேந்திரன், திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர்.
தூத்துக்குடியில் உதவி எஸ்.பியாக பணியைத் தொடங்கிய அவர் பின்னர் ராமநாதபுரம் மேற்கு மற்றும் மதுரை வடக்கு எஸ்.பியாக பணியாற்றியுள்ளார். கியூ பிரிவு எஸ்.பியாகவும் பணியாற்றியுள்ளார்.
கடலோரக் காவல் படை டிஐஜி, சிபிசிஐடி ஐஜி, ஊழல் தடுப்புப் பிரிவில் ஐஜி, கோவை மாநகர காவல்துறை ஆணையர், நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி என பதவிகளை வகித்துள்ள ராஜேந்திரன் தற்போது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக உள்ளார்.
1995ம் ஆண்டு காவல்துறை பதக்கம், 2006ல் குடியரசுத் தலைவர் பதக்கத்தை ராஜேந்திரன் பெற்றுள்ளார்.
புதிய டிஜிபியாக நாளை ராஜேந்திரன் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications