கோட்டையா, கோபாலபுரமா: கருணாநிதி முடிவுசெய்து கொள்ளட்டும்- பாமக
பெரம்பலுர்:கோட்டையில் இருப்பதா அல்லது கோபாலபுரத்துக்கு திரும்பிப் போவதா என்பதை கருணாநிதி முடிவு செய்து கொள்ளட்டும் என மூத்த பாமக தலைவரும் வன்னியர் சங்க மாநிலத் தலைவருமான காடுவெட்டி குரு கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகத்துக்கும், ஈரோடு மாவட்டத்தில் இருந்து கேளராவுக்கும் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்க திமுக அரசு தவறினால் மக்களை திரட்டி பாமக போராட்டம் நடத்தும்.
மக்கள் பிரச்சினைகளை கண்டும் காணாமல் இருப்பதற்கு பாமக ஒன்றும் திமுகவின் கிளை கழகம் அல்ல. இந்த அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம். ஆனால், கெட்டது செய்தால் நிச்சயமாகத் தட்டிக் கேட்போம்.
நாங்கள் தவறுகளை சுட்டிக் காட்டினால், அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கருணாநிதி முடிவு எடுக்கும் நேரம் வந்து விட்டது என்று கூறுகிறார்.
கோட்டையில் இருப்பதா அல்லது கோபாலபுரத்துக்கு திரும்பிப் போவதா என்பதை கருணாநிதி முடிவு செய்து கொள்ளட்டும்.
அரியலூர் மாவட்டத்தை மிண்டும் உருவாக்குவோம் என்று கூறி இந்த பகுதி மக்களை கருணாநிதி ஏமாற்றி விட்டார். முன்பு அதற்கு அமைச்சர் நேரு தடையாக இருந்தார். இப்போது மத்திய அமைச்சர் ராசா தடையாக உள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications