பாழாய்ப் போன அரசியல் சண்டை;அநியாயமாக பறிபோன சிறுவனின் உயிர்!
சிம்லா:இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் உயிருக்குப் ேபாராடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனுடன் வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் செல்ல பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அனுமதிக்காததால் அந்த சிறுவன் பரிதாபமாக பலியானான்.
சிம்லாவைச் சேர்ந்த சிறுவன் டிங்கு (4). கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் டிங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிம்லாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டான்.
அப்போது சட்டசபைக்கு வெளியே ஊர்வலம் நடத்துவது தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் மோதல் மூண்டு இரு தரப்பினரும் கடும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனால், ஆம்புலன்ஸ் செல்வதற்கு அவர்கள் வழி விடவில்லை.
இதனால் அந்த சிறுவனின் நிலைமை மோசமானது. பின்னர் போலீஸார் தலையிட்டு இரு கட்சியினரையும் அடித்து விரட்டினர். இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸார் 6 பேரும் காயமடைந்தனர்.
ஆனால் இந்த சண்டை முடிந்து ஆம்புலன்ஸ் செல்ல வழி பிறந்தபோது, டிங்கு உயிரோடு இல்லை. அநியாயமாக பறிபோயிருந்தது அவனது உயிர்.












Click it and Unblock the Notifications