செளதியில் திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் சோதனை கட்டாயமாகிறது
Subscribe to Oneindia Tamil
ரியாத்:செளதி அரேபியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந் நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
அதன்படி திருமணம் ஆகவுள்ள மணமகனும், மணமகளுக்கு எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகிறது.
வரும் 2008ம் ஆண்டு முதல் இந்த எய்ட்ஸ் பரிசோதனை கட்டாய சட்டம் நடைமுறைக்கு வரும் என செளதி சுகாதார அமைச்சர் அல்-வாடன் தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் கணவனிடமிருந்து விவகாரத்து:
இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த பெண், தனது கணவருக்கு எய்ட்ஸ் நோய் பாதித்துள்ளதை சுட்டிக் காட்டி விவாகரத்து பெற்றுள்ளார்.
புஜாரியாவில் உள்ள ஷரியா நீதிமன்றம் அவருக்கு விவகாரத்து வழங்கியுள்ளது. தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை மறைத்து பெண்ணை அவர் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications