கரூர் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை:கருர் மாவட்ட திமுக செயலாளர் உள்ளிட்ட முக்ககிய நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, ஜெயலலிதா குறித்து முதல்வர் கருணாநிதி அநாகரீகமாக எழுதியதாக கூறி தமிழகம் முழுவதும் முரசொலி நாளிதழ்களை எரித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது கருணாநிதியின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன.
கரூரில் இந்தப் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. போராட்டம் நடத்திய அதிமுகவினர் மீது திமுகவினர் பெரும் தாக்குதலில் இறங்கினர். அதிமுகவினரை ஒட ஒட விரட்டியடித்தனர்.
பஸ், வேன்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் தோகமலை அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பையா உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
ஆனால், வன்முறையில் இறங்கிய திமுகவினர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்குக் கூட பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கருப்பையா வழக்குப் பதிவு செய்தார்.
அதை விசாரித்த நீதீபதி திமுக மாவட்ட செயலாளர், கருர் நகர திமுக செயலாலர் கனகராசு, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பூவை ரமேஷ் பாபு, இளைஞர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்திரவிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications