செங்கோட்டை: கோஷ்டி மோதலால் கலைஞர்டிவி பேனர் அகற்றம் - திமுகவினர் கொதிப்பு
செங்கோட்டை:செங்கோட்டையில் கோஷ்டிப் பூசல் காரணமாக கலைஞர் டிவி விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. இதனால் நகராட்சித் தலைவர் மீது திமுகவினர் கொதிப்படைந்துள்ளனர்.
திமுக சார்பில் கலைஞர் டிவி தொடங்கப்பட்டுள்ளது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் முதல் இது முழுமையான ஒளிபரப்புக்கு வருகிறது. தற்போது சோதனை ஒளிபரப்பு நடந்து கொண்டுள்ளது.
கலைஞர் டிவியை வரவேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் பேனர்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில், செங்கோட்டையில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.
இந்த பேனர் 3 இடங்களில் நகராட்சியின் அனுமதியோடு வைக்கப்பட்டது. தாம். இந்த நிலையில் திடீரென நேற்று பிற்பகல் இந்த டிஜிட்டல் பேனர்களை நகராட்சி அதிகாரிகள் அகற்றி விட்டனர்.
முறையான அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக கூறி அவற்றை காவல்துறை உதவியுடன் அகற்றியுள்ளனர். இதையறிந்த திமுக கவுன்சிலர்கள் கொதிப்படைந்தனர். திமுகவைச் சேர்ந்த நகராட்சித் தலைவர் ரகீம்தான் இதற்கு காரணம் என்று அவர்கள் குமுறியுள்ளனர். இதுதொடர்பாக முதல்வருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அவர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து சிலர் கூறும்போது, செங்கோட்டையில் திமுகவினர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். நகராட்சித் தலைவர் படத்தைப் போடாமல் இன்னொரு தரப்பினர் பேனர் வைத்ததால்தான் அவை அகற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications