அடுத்த அதிமுக ஆர்ப்பாட்டம் தஞ்சையில்;br/பயிர்க் கடன் வழங்க வலியுறுத்தி!
சென்னை:
விவசாயிகளுக்கு பயிர்க்கடன், விதை நெல், உரம் போன்றவற்றை வழங்க வலியுறுத்தி தஞ்சாவூரில் நாளை அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் ெபாதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் வாழ்வாதரங்களை பாதுகாக்க வேண்டிய திமுக அரசு, கூட்டுறவு வங்கிகள் மூலம், விவசாயிகளுக்கு தேவையான பயிர்க்கடனை வழங்காமல் சிறு மற்றும் குறு விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
உணவிற்காக உழவரிடமே செல்ல வேண்டியிருப்பதால் எவ்வளவு கஷ்டமானாலும் உழவுத்தொழில் உலகின் தலையானது என்றார் திருவள்ளுவர். அத்தகைய சிறப்புமிக்க உழவுத்தொழிலை மேற்கொள்ளும் விவசாயிகளின் நலனைக் காப்பது ஒரு அரசின் தலையாயக் கடமையாகும்.
விவசாயத்திற்கு தேவையான விதை நெல் மற்றும் உரம் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் வெளிச்சந்தையில் மிக அதிகவிலை கொடுத்து வாங்குவதோடு தரமற்ற நெல்லை வாங்க வேண்டிய அவல நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சொல்லமுடியாத துயரம் அடைந்து வருகிறார்கள்.
விவசாயிகளின் துயரைத் துடைக்க்க ேகாரிய அரசின் போக்கைக் கண்டித்து தஞ்சையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நாளை காலை 11 மணிக்கு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
போராட்டத்துக்கு அதிமுக விவசாயப் பிரிவு செயலாளர் துரை. கோவிந்தராஜன் தலைமை தாங்குவார் என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications