'ஆதிதிராவிடர்' என அழைப்பதை எதிர்த்துbr/தேவேந்திர குல சங்கம் உண்ணாவிரதம்
திருநெல்வேலி:
தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆதி திராவிடர்கள் என அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தமிழக அரசு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 78 ஜாதிகளையும், ஆதிதிராவிடர் என்ற பெயரில் அழைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவினை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளார் சங்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை தொலைபேசி அலுவலகம் எதிரே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநில துணைச் செயலாளர் அய்யாபிள்ளை தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ஜீவராஜ் கலந்துக் கொண்டு பேசுகையில், ஆதிதிராவிடர் என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பெயராகும். ஆனால் இந்த பெயரை அனைத்து பிரிவும் பயன்படுத்துவது ஏற்க இயலாது.
இந்த அரசாணை 1 கோடி தேவேந்திரர்களது அடையாளங்களை அழிக்க நடக்கும் முயற்சி என்றார். போராட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications