பள்ளி மாணவியை கற்பழித்த திமுக பிரமுகர்!
குளித்தலை:
குளித்தலையில் பள்ளி மாணவியை கற்பழித்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கருர் மாவட்டம் குளித்தலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார் புனிதா. இவரது பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தார் புனிதா.
அப்போது புனிதாவின் அண்டை வீட்டில் வசிக்கும் மாவட்ட திமுக விவசாயத் தொழிலாளர் அணியின் துணை அமைப்பாளர் பிச்சைமுத்து தனது நண்பர்களுடன் புனிதாவின் வீட்டுக்குள் புகுந்து அவரை கடத்திச் சென்றுள்ளார்.
புனிதாவை தனது வீட்டிற்கு கொண்டு சென்று கற்பழித்துள்ளார். மேலும் பிச்சைமுத்துவின் நண்பர்களும் கற்பழித்துள்ளனர். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக புனிதாவை மிரட்டியுள்ளனர்.
இது குறித்து புனிதா தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் போலீஸ் புகார் கொடுத்தனர்.
ஆனால் பிச்சைமுத்துவை கைது செய்யக் கூடாது என குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் போலீஸாருக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தந்துள்ளனர்.
திமுக தலைமைக்கும் இந்தத் தகவல் போகவே பிச்சைமுத்துவை உடனடியாகக் கைது செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து பிச்சைமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற எம்எல்ஏ மாணிக்கம் மீதும் நடவடிக்கை எடுப்பதே சரியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications