டாடா: ''ஜெ. நேரடியாக களம் இறங்குவார்''!
தூத்துக்குடி:
டாடா ஆலை விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரடியாக களம் இறங்குவார் என்று அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் டைட்டானியம் ஆலை வருவதை யாருமே விரும்பவில்லை. அனைவரும் எதிர்க்கிறார்கள். இந்த ஆலையைக் கொண்டு வர ஆட்சியாளர்கள் தொடர்ந்து முயற்சித்தால், அதை எதிர்த்து ஜெயலலிதா நேரடியாக களம் இறங்குவார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், கள்ளச்சாராயம், கட்டப் பஞ்சாயத்து, மணல் கடத்தல், லாட்டரி என அனைத்தையும் எதிர்க்கிறார். இவற்றை தடுக்க தமிழக அரசால் முடியவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன.
இரு கட்சியினரும் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் நடத்துகின்றனர். இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளன.
விலைவாசி உயர்வு மக்கள் மத்தியில் பெரும் மன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விரைவில் ஆட்சி மாற்றம் அமைவது உறுதி என்றார் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications