பிள்ளைகள் படிப்புக்கு வாங்கிய கடனைbr/அடைக்க முடியாத தந்தை தற்கொலை

Subscribe to Oneindia Tamil


சென்னை:

மகன் மற்றும் மகள் ஆகியோரின் படிப்புக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாத வேதனையில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (45). குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், சீனிவாசன், சரவணன் என்ற மகன்களும், பாரதி என்ற மகளும் உள்ளனர்.

பிள்ளைகள் நன்றாகப் படிக்கக் கூடியவர்கள் என்பதால் அவர்களை தனது சக்தியையும் மீறி கடன் வாங்கிப் படிக்க வைத்தார் பழனிவேல்.

இப்படி வாங்கிய கடன் மலை போல உயர்ந்தது. இதனால் கடனை அடைக்க முடியாமல் திணறினார் பழனிவேலு. கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்க ஆரம்பித்னர். இதனால் மன வேதனை அடைந்து அதை மறக்க குடிப் பழக்கத்தை நாடினார்.

இதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போய், வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார் பழனிவேலு.

பதறிப் போன இரு மகன்களும் தந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இரவில் தூங்கப் ேபாகும் முன் விஷத்தை குடித்துள்ளார் பழனிவேலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+