போதையில் மகளை கெடுத்த மாபாதகன் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை என்ற இடத்தில், குடிபோதையில் பெற்ற மகளையே கற்பழித்த கொடூரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் ரகு (35). இவரது மனைவி குமாரி. இருவரும் அடிக்கடி சண்டை போடுவது வழக்கம். சண்டை போடும்போதெல்லாம் குமாரி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குப் போய் விடுவாராம்.
குமாரியின் தாய் வீடும் அருகாமையில்தான் உள்ளது. இந்தத் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான ரகு, நேற்று தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார்.
ஆனால் குமாரி வர மறுத்துள்ளார். இதையடுத்து தனது 12 வயது மகள் உள்பட நான்கு குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் இரவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.
அப்போது போதை கண்ணை மறைக்க பெற்ற மகள் என்று கூட பாராமல் தனது மகளைக் கற்பழித்துள்ளார். பின்னர் இதை யாரிடமும் கூறக் கூடாது என மகளை மிரட்டியுள்ளார்.
ஆனால் இன்று காலை தனது தாயாரிடம் போய் நடந்ததைக் கூறி அழுதுள்ளார் அந்த அப்பாவிச் சிறுமி. வெகுண்டெழுந்த குமாரி, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் ரகுவைக் கைது செய்தனர். கற்பழிப்புக்கு ஆளான சிறுமியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications