வலங்கைமானில் பாமக கல்வெட்டு உடைப்பு!
Subscribe to Oneindia Tamil
வலங்கைமான்:
வலங்கைமானில் பாமக கல்வெட்டு நள்ளிரவில் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வலங்கைமானில் போலீஸ் நிலையம் அருகே பாமக கல்வெட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் அங்கு பாமக கொடியேற்றி வைக்கப்பட்டது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த கல்வெட்டை யாரோ உடைத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்த பேரூராட்சி தலைவரும் பாமக நகரச் செயலாளருமான குணசேகரன் பாமகவினருடன் வந்து உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்றார்.
இத்தகவல் காட்டுத்தீயாக பரவ அங்கு பாமகவினர் பெருமளவில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சூழ்நிலையை உணர்ந்த அதிகாரிகள் அங்கு போலீசாரை குவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications