கேரள சாலை விபத்தில் தூத்துக்குடிbr/இளைஞர்கள் 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
கேரள மாநிலம் ஆலப்புழை அருகே நடந்த சாலை விபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த 3 வாலிபர்கள் பலியானார்கள்.
தூத்துக்குடியில் இருந்து எர்ணாகுளத்திற்கு ஒரு டாடா சுமோ கார் சென்று கொண்டிருந்தது. அதில் தூத்துக்குடியை சேர்ந்த டேவிட், வினோத், ஜூடு, சென்சன், டேவிட்சன் ஆகிய 6 பேர் இருந்தனர்.
அதிகாலை 5.10 மணியளவில் ஆலப்புழை அருகே கருயிழக்குளங்கரை என்ற இடம் அருகே கார் வந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது.
இந்த விபத்தில் டேவிட், வினோத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். ஜூடு உள்பட மற்ற 4 பேரும் படுகாயமடைந்த நிலையில் ஆழப்புழை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு ஜூடு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக ஆலப்புழை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications