குத்துவிளக்கால் அடித்து மனைவி படுகொலைbr/நெல்லையில் பயங்கரம் - கணவன் கைது

Subscribe to Oneindia Tamil


திருநெல்வேலி:

நெல்லை மாவட்டம் வீ.கே.புதூர் அருகே மனைவியை குத்து விளக்கால் அடித்துக் கொன்றார் கணவர்.
Thanthondriammal
நெல்லை மாவட்டம் வீ.கே.புதூர் அருகே உள்ள வீராணத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மனைவி தான்தோன்றியம்மாள்.

இவர்களுக்கு வேல்ம்மாள், சுமதி என்ற 2 மகள்களும், மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி தற்போது தூத்துக்குடியில் வசித்து வருகின்றனர்.

வெள்ளத்துரை வீராணத்தில் உள்ள ஒரு காற்றாலை நிறுவனத்தில் வாட்மேனாக வேலை பார்த்து வந்தார். கடந்த 10 நாட்களாக வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்தார் வெள்ளைத்துரை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்றிரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த வெள்ளத்துரை அருகில் இருந்த குத்துவிளக்கை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் படுகாயமடைந்த தான்தோன்றியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் குத்து விளக்கு இரண்டாக உடைந்தது.

தகவல் அறிந்ததும் ஆலங்குளம் டி.எஸ்.பி கிங்கிலின், வீ.கே புதூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வெள்ளத்துரையை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+