241 கோவில்களுக்கு ரூ. 10 கோடியில் மர தேர்கள்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் உள்ள 241 கோவில்களுக்கு மரத்தால் ஆன தேர்கள் செய்ய ரூ. 10 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் இந்து அறநிலையத்துறை இயக்குநர் டி.பிச்சாண்டி கூறுகையில்,
காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலுக்கு ரூ. 55 லட்சத்தில் மரத் தேர் செய்யப்படும்.
இக்கோவிலில் யானைகளைப் பராமரிக்க ரூ. 10 லட்சம் செலவாகும். இத்தொகையை பகிர்ந்து கொள்ள பொது மக்களும் தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும்.
80 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 500 கோவில்களில் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்ற நிலையில் உள்ளன.
பழம் பெரும் கோவில்களைப் பாதுகாக்கும் பணியில் அதிகாரிகளுக்கு உதவியாக பொது மக்களும் முன்வர வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications