ஏக்கருக்கு ரூ. 2 லட்சம், வீட்டில் ஒருவருக்குbr/வேலை: டாடாவுக்கு காங்கிரஸ் கோரிக்கை
சென்னை:
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமையவிருக்கும் டாடாவின் டைட்டானியம் தொழிற்சாற்சாலைக்கு காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது. ஆனால் கையகப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தலைமையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து டாடா ஆலை அமைவது குறித்த தாங்கள் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை அளித்தனர்.
அந்த அறிக்கையில், டைட்டானியம் தொழிற்சாலை அமையவுள்ள பகுதியில் விவசாய நிலங்களை வைத்திருப்பவர்களில் சிலர் இத்தொழிற்சாலை அமைவதை எதிர்க்கின்றனர். ஆனால் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் இந்த தொழிற்சாலையை வரவேற்கிறார்கள்.
இந்தத் திட்டம் தொடர்பாக சிலர் அரசுக்கு எதிராக வதந்திகளை பரப்பி வந்துள்ளனர். முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தந்துள்ளனர்.
இத் திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது குடியிருப்பு பகுதிகளிலிருந்து 1 கி.மீக்கு அப்பால் தான் கையகப்படுத்த வேண்டும். நீர் ஆதாரங்கள் இருக்கும் பகுதிகளில் 500 மீட்டர் தூரத்திற்குள் மணல் அள்ளக் கூடாது.
வழிபாட்டு ஸ்தலங்கள், கல்லறைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் போன்றவை பாதிக்கப்படக் கூடாது. நிலங்கள் கையகப்படுத்தப்படும் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை டாடா நிறுவனம் செய்து தர வேண்டும்.
டாடா நிறுவனம் கையகப்படுத்தும் நிலத்திற்கு ஏக்கர் ஒன்றிற்கு தலா 2 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் கொடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நிலம் கொடுப்பவர்களின் குடும்பத்தாருக்கு கண்டிப்பாக ஒருவருக்கு டாடா நிறுவனத்தில் வேலை கொடுக்க வேண்டும்.
மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளை டாடா நிறுவனம் அமைக்க முன் வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications