புலி 'சூப்' தயாரித்து விற்ற பெண் கைது!!
ஹனோய்:
வியட்நாமின் ஹனோய் நகரில் புலியின் எலும்புகளைக் கொண்டு சூப் தயாரித்து விற்ற பெண்ணைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் வீட்
டு ஃபிரிட்ஜில் 2 புலிகளின் பதப்படுத்தப்பட்ட உடல் மற்றும் வேறு சில வன விலங்குகளின் உல் பாகங்களும் கைப்பற்றப்பட்டன.
40 வயதாகும் அந்தப் பெண், புலிக் கறியை தனது வீட்டின் வெளிப்புறத்தில் வைத்து சமைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மருந்து தயாரிப்பதற்காக புலிகளைக் கொன்று ஃபிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்ததாகவும், புலி சூப் தயாரித்ததாகவும் அந்தப் பெண்மணி கூறியுள்லார்.
இதற்காக 3 சமையல்காரர்களையும் அவர் சம்பளத்திற்கு வைத்திருந்தார். தற்போது நான்கு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த புலி மருந்தை 100 கிராமுக்கு 800 டாலர் என விலை வைத்து விற்று வந்துள்ளார் அப்பெண். அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வெளியே உள்ள சிற்றுண்டி விடுதிக்கு தினசரி நிறையப் பேர் வருவார்கள்.
அவரது சமையல் கட்டிலிருந்து வித்தியாசமான வாடை வருவதை பார்த்த சிலர் இதுகுறித்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் வந்து விசாரித்தபோதுதான் புலியை சமையல் செய்து வந்தது தெரிய வந்தது.
அப்பெண்ணின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஃபிரிட்ஜிலிருந்து கைப்பற்ற இரு புலிகளும் இந்திய, சீன வகையாகும். இரண்டும் தலா 250 கிலோ எடை கொண்டவை. ஒரு புலி 20 ஆயிரம் டாலர் விலை மதிக்கத்தக்கதாகும். மியான்மர் அல்லது லாவோஸிலிருந்து இவை வாங்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஆம்புலன்ஸ் அல்லது சவப்பெட்டிகளில் வைத்து இந்தப் புலிகள் ெகாண்டு வரப்பட்டிருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுதவிர நான்கு கரடிகளின் தாடைகள், யானைத் தந்தங்கள் மற்றும் வேறு சில காட்டு விலங்குகளின் உடல் பாகங்களும் இந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதம்தான் புலிக்கு விஷம் வைத்துக் ெகான்றதாக 8 பேருக்கு வியட்நாம் நீதிமன்றம் தலா 11 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications