ஆசிரியர் தினத்திற்கு விடுமுறை விடாததால்br/பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
திருச்சி:
ஆசிரியர் தினத்திற்கு விடுமுறை விடப்படாததால் ஆத்திரமடைந்த சில பெற்றோர்கள், பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிரியர் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் திருச்சி பாலக்கரையில் உள்ள கிறிஸ்தவ மிஷனரி பள்ளியிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளி நிர்வாகம் விடுமுறை கிடையாது என மறுத்து விட்டது.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பள்ளியில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து பள்ளிக்கூடம், சமுதாய மையம், பள்ளி வளாகத்தையொட்டி அமைந்துள்ள சகாய மாதா சர்ச் ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்தது. விடுமுறை விடப்படாத ஆத்திரத்தில் பெற்றோர்களில் சிலர்தான் இந்தப் புரளியைக் கிளப்பியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பின்னர் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.












Click it and Unblock the Notifications