சாலை விபத்தில் தந்தை, மகன் பலி
சென்னை:
சென்னை குரோம்பேட்டையில் இன்று காலை நடந்த கோர விபத்தில் தந்தையும், மகனும் பரிதாபமாக பலியானார்கள்.
சென்னையை சேர்ந்த தனியார் கம்பெனியில் கணக்காளராக வேலை பார்ப்பவர் வெங்கடேசன் (45). இவரது மகன் சந்தோஷ் (8). சைதாப்பேட்டை புனித மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 3வது வகுப்பு படித்து வந்தான் சந்தோஷ்.
இன்று காலை தாம்பரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு மகனுடன் சென்றார் வெங்கடேசன். பின்னர் மகனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சென்னையில் நேற்று பெய்த கனமழையால ரோடுகள் மிகவும் சேதமடைந்துள்ளன. ஜி.எஸ்.டி. சாலையில் அவர் வந்து கொண்டிருந்தார். அப்போது குரோம்பேட்டை பகுதியில் மழையால் ஏற்பட்டிருந்த பெரும் பள்ளத்தைப் பார்த்த அவர் வண்டியை மெதுவாக ஓட்டினார்.
அப்போது அவருக்குப் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து வெங்கடேசனின் வண்டி மீது மோதியது. இதில் வெங்கடேசனும், அவரது மகனும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் உடல் நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். தாம்பரம் போக்குவரத்து போலீசார், இருவரின்
உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கு காரணமான தனியார் பேருந்தின் ஓட்டுநர் டிரைவர் தப்பி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்












Click it and Unblock the Notifications