பெண்களை வைத்து விபச்சாரம்:br/நடிகை ஜெயமாலாவின் தம்பி கைது
சென்னை:
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பெண்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பிரபல நடிகை ஜெயமாலாவின் தம்பியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தி.நகர் பகுதியில் ஒரு கும்பல் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து குறிப்பிட்ட இடத்தை போலீஸார் அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது அங்கு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சூரிய பாபு உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில் சூரியபாபு, பிரபல நடிகை ஜெயமாலாவின் தம்பி என்பது விசாரணையில் தெரிய வந்தது. நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி பெண்களை சென்னைக்கு கடத்தி வந்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார் சூரியபாபு.
அவருடன் கைதான மற்ற 3 பேரும் சினிமா உதவி இயக்குநர்கள் என்பதும் தெரிய வந்தது.
நான்கு பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications