தூத்துக்குடி: கப்பல்களில் மரத் தடிகளைbr/ஏற்றி, இறக்க நவீன இயந்திரம் அறிமுகம்
தூத்துக்குடி:
தூத்துக்குடி துறைமுகத்தில் மரத்தடிகளை கப்பலில் ஏற்றி இறக்க அதி நவீன முறை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நவீன இயந்திரத்தைத் தொடங்கி வைத்து தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக துணை தலைவர் அ.சுப்பையா கூறுகையில், தூத்துக்குடி துறைமுகத்தில் மரத்தடிகளை கையாளுவதற்கு ஹைட்ராலிக் கிராப்ஸ் என்ற நவீன பளுதூக்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தூத்துக்குடி துறைமுக பாதுகாப்பு குழு கூட்டத்தில் எடுத்த முடிவை கருத்தில் கொண்டு, செயின்ட் ஜான் பிரைட் சிஸ்டம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இரு நவீன இயந்திரங்களை கொண்டு வந்துள்ளது.
இரண்டு நவீன பளு தூக்கி இயந்திரங்களும் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 டன் எடை கொண்ட மரத்தடிகளை கையாளும் திறன்கொண்டவை.
இதன் மூலம் மரத்தடிகள் துறைமுகத்திற்கு வருவது அதிகரிக்கும்.
மேலும் கப்பல் தளத்தில், கப்பல் தங்கி செல்லும் நேரம் குறைவதோடு தளத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications