குடந்தை கோவில்களில் சாமி கும்பிட்டbr/கர்நாடக துணை முதல்வர்!
கும்பகோணம்:
கர்நாடக துணை முதல்வர் எடியூரப்பா, கும்பகோணம் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.

கர்நாடக துணை முதல்வர் எடியூரப்பா நேற்று திருச்சியிலிருந்து புறப்பட்டு பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயத்திற்கு சென்று 108 சிவ லிங்கங்களை மனம் உருகி வழிபாடு நடத்தினார்.
பின்னர் கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் தேனுபுரிஸ்வரர் கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மனை தரிசித்து சிறப்பு பூசைகள், வழிபாடு நடத்தினார்.
இன்று காலை தஞ்சையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று மனம் உருக வழிபாடு நடத்தினார்.
எடியூரப்பா கும்பகோணம் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்யும் தகவல் வெளியே தெரிந்தால் தஞ்சை விவசாயிகள் போராட்டம் நடத்தக் கூடும் என உளவுத்துறை முன் கூட்டியே தகவல் கொடுத்ததால் இந்த பயணம் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. எடியூரப்பாவுக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications