தஞ்சையில் தீவீரவாதிகள் ஊடுறுவல்?br/போலீஸ் தேடுதல் வேட்டை
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து பல்வேறு பகுதிகளில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். ஆனால் இத்தகவல் புரளி என்பது பின்னர் தெரிய வந்தது.
நன்னிலத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவியதாக போலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் பல குழுக்களாக பிரிந்து திட்டச்சேரி, திருமருகல், வவ்வாலடி, ஆதலையூர், ஏனங்குடி, பாக்கம்போட்டுர், வடகரை, போன்ற பல பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
ஆனால் போலீசாருக்கு தீவீரவாதிகள் பற்றிய தகவலோ, தடயமோ ஏதும் கிடைக்கவில்லை. எனவே இத்தகவல் புரளியாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இப்பகுதிகளில் தீவீரவாதிகள் இரவில் பயிற்சி பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இப்பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications