திருச்செந்தூர் முருகன் கோவிலில்br/ரூ.5.43 கோடியில் திருப்பணிகள்
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் உள்ள புகழ் பெற்ற சுப்ரமணியசுவாமி கோவிலில் ரூ. 5.43 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன. இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இதைத் தொடங்கி வைக்கிறார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கிரி பிரகாரங்களில் 44.50 லட்சம் ரூபாய் செலவில் கருங்கல் பதிப்பு, நாலுமூலைக் கிணறு தேரி நிலத்தில் 47.50 லட்சம் ரூபாய் செலவில் புதிய கோசாலை, 36 லட்சம் ரூபாய் செலவில் கோசாலை சுற்றுசுவர் அமைக்கப்படவுள்ளன.
இதுதவிர 30 லட்சம் ரூபாய் செலவில் நாழிக்கிணறு பஸ் நிலையம் அருகில் புதிய சுகாதார வாளகம், கந்தவேல் சஷ்டி விரத மண்டபத்தில் 12 லட்சம் ரூபாய் செலவில் புதிய கழிவறைகள், 48 லட்சம் ரூபாய் செலவில் வேலன்விடுதி மேம்பாடு, 80 லட்சம் ரூபாய் செலவில் ஜெயந்திநாதர் விடுதி புதுப்பித்தல் ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், 18.50 லட்சம் ரூபாய் செலவில் கோவில் வாளகத்தில் புதிய மின்கோபுரம், 11.60 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஒலி, ஒளிப்படகருவிகள் பொருத்துதல், 31 லட்சம் ரூபாய் செலவில் மகாமண்டபத்தில் நவீன குளிர்சாதன வசதி, 48 லட்சம் ரூபாய் செலவில் நவீன முடிக்கணிக்கை செலுத்துமிடம், 46 லட்சம் ரூபாய் செலவில் சண்முகவிலாச மண்டபம், மகா மண்டபத்தில் துருபிடிக்காத கம்பியிலான முறைவரிசை, கதவுகள் அமைத்தல், 60 லட்சம் ரூபாய் செலவில் கலையரங்கம் அருகில் புதிய தகவல் நிலையம் ஆகியவை அமைக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 5.43 கோடி ரூபாய் செலவில் இந்தத் திருப்பணிகள் நடைபெறவுள்ளன. இப்பணிகளுக்கான கால்கோல் விழா, அறங்காவலர் குழு தலைவர் தேவதாச சுந்தரம் உபயமாக பொறித்துள்ள பக்தி பாடல் குறுந்தகடு வெளியிட்டு விழா ஆகியவை இன்று இரவு 7.30 மணிக்கு கோவிந்தசாமி கலையரங்கில் நடைபெறுகிறது.
செய்திதுறை செயலாளர் ராஜேந்திரன், அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி, கலெக்டர் பழனியாண்டி ஆகியோர் பேசுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications