நாங்குநேரி தொழில் பூங்காவுக்காக உண்ணாவிரதbr/போராட்டம் - சரத் அறிவிப்பு
விருதுநகர்:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தொழில் பூங்காவை உடனடியாக நிறுவக் கோரி உண்ணாவிர போராட்டம் நடத்தப் போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
விருநகரில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில், விருநகரில் ஏற்கனவே வாங்கப்பட்ட 7 ஏக்கர் நிலம் தவிர மேலும் 8 ஏக்கர் நிலம் வாங்கி 15 ஏக்கர் நிலத்தில் காமராஜருக்கு மணி மண்டபம் கட்டப்படும்.
கட்சியின் முதல் மாநில மாநாடு டிசம்பர் 12ம் தேதி மதுரையில் நடைபெறும். மக்களின் தேவை அறிந்து கட்சி நிர்வாகிகள் தினமும் கூடி ஆலோசனை நடத்துவார்கள்.
ரூ 3000 கோடியில் 75 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நாங்கு நேரி தொழில் பூங்கா திட்டத்தை விட்டுவிட்டு டாடாவின் டைட்டானியம் ஆலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று அரசு விளக்க வேண்டும்.
நாங்குநேரி தொழில் பூங்காவை முதலில் செயல்படுத்தக் கோரி உண்ணாவிரம் இருக்க உள்ளோம். அதற்கான தேதி பின்பு அறிவிக்கப்படும். தனியாக நின்று ஆட்சியை பிடிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications