ராணுவம் - புலிகள் மோதலில் 10 பேர் பலி

Subscribe to Oneindia Tamil


கொழும்பு:

இலங்கையின் வடக்கில் உள்ள நாகர்கோவில் பகுதியில் நடந்த சண்டையில் 7 விடுதலைப் புலிகளும், 3 ராணுவத்தினரும் பலியானதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராணுவத் தரப்பில் கூறுகையில், நாகர்கோவில் பகுதியில் பாதுகாப்பு தடுப்பு அரண்களைத் தாண்டி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவத் தடுப்பை மீறி உள்ளே நுழைய முயற்சித்னர்.

இதைடுத்து ராணுவமும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல, வவுனியா மாவட்டத்தில், குடுருவிட்டான்குளம், தம்பனை, உமயரத்துவரன்குளம் ஆகிய இடங்களில் நடந்த மோதலில் ஐந்து விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்களில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதை விடுதலைப் புலிகள் தரப்பு உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வலுத்து வருவதைத் தொடர்ந்து அங்கிருந்து 3000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தின் தெற்கில் உள்ள அரிப்பு, சிலவத்துரை, முல்லைக்குளம், நனட்டன் ஆகிய பகுதிகளிலிருந்து வடக்கு நோக்கி இதுவரை 3109 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பள்ளிக்கூடங்களும், ஒரு மசூதியும் சேதமடைந்துள்ளதாக தமிழர்கள் புகார் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, சமீபத்தில் புலிகளிடமிருந்து மீட்ட சிலவத்துரை, முல்லைக்குளம் ஆகிய இடங்களில் புதிய முகாம்களை அமைக்க இலங்கை கடற்படை முடிவு செய்துள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+