பொன்முடி முடிவு காலம் கடந்தது - ராமதாஸ்
சென்னை:
சிமென்ட் விலை உயர்வைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தப் போவதாக அறிவுத்தவுடன், வெளிநாட்டிலிருந்து சிமென்ட் வருகிறது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இது காலம் கடந்த முயற்சி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக தொழில் வளர்ச்சிக்கு மாற்று திட்டம் ஒன்றை பாமக தயாரித்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கி இருக்கிறோம். இந்த திட்டத்தை நடைமுறைபடுத்தினால் எல்லோருக்கும் சம வேலைவாய்ப்பு கிடைக்கும். கிராமப்புற மக்கள் அதிக பயன்பெறுவார்கள்.
தற்போது தொழில்வளத்தை பெருக்குவோம் என்ற பெயரில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான் பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் முதலீடு செய்து பல்வேறு சலுகைகளை வழங்குகிறார்கள்.
சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பெரிய தொழில் நிறுவனங்களும், உயர்கல்வி படித்தவர்களும் மட்டுமே பயன்பெறுகிறார்கள்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்படும் போது குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. சாதாரண மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை.
கடந்த 6,7 ஆண்டுகளில் தகவல் தொடர்பு நிறுவனங்கள் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் குவிந்துள்ளன. இதனால் 8 சதவீதம் பேர்தான் பயன்பெற்றுள்ளார்கள்.
அடுத்து கோவை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரும் என்று சொல்கிறார்கள்.
எல்லோருக்கும் சம வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாமக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கடந்த 2 மாதங்களாக நிபுணர்களுடன் கலந்து பேசி ஒரு புதிய தொழில் கொள்கையை உருவாக்கி இருக்கிறோம். இதன்படி உலக மயமாக்கலுக்கு பதிலாக சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்கள் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறோம்.
இந்த புதிய திட்டத்தின்படி விவசாய பொருள் உற்பத்தி, கிராம கைத்தொழில் வளர்ச்சி உள்ளிட்ட வழிமுறைகளை கூறி இருக்கிறோம். இதன் மூலம் கிராமதத்தில் பெரும்பாலானவர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
இந்த திட்டத்தை அடுத்த மாதம் டெல்லி செல்லும்போது பிரதரிடமும் வழங்க இருக்கிறேன். தமிழக அரசு புதிய தொழில் கொள்கைகளை அறிவிக்கும்போது எங்கள் ஆலோசனைகளையும் சேர்த்துக் கொண்டால் அது நாட்டு மக்களுக்கு பயனளிப்பதாக இருக்கும்.
சிமென்ட் இறக்குமதி செய்வதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும் இது காலம் கடந்த முயற்சியாகும். எத்தனையோ சிமென்ட் ஆலை அதிபர்களை சந்தித்து பேசி விலையை குறைக்க சொன்னார்கள். ஆனால் அரசு அவர்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.
மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிமென்ட வரியைக் குறைத்தார். ஆனாலும் சிமென்ட் அதிபர்கள் விலையை குறைக்கவில்லை. முன்னதாகவே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் நல்ல பயன் கிடைத்திருக்கும் என்றார் ராமதாஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications