கரூரில் 6 வழிப்பறிக் கொள்ளையர்கள் கைது
கரூர்:
கரூர் அருகே இரவில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான வேன் கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வேனை 6 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து மறித்தது.
வேனில் இருந்த எண்ணெய் நிறுவன ஊழியர்களை தாக்கி விட்டு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.
பணத்தைப் பறிக்கொடுத்த ஊழியர்கள் போலீஸில் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். இந்த நிலையில், தப்பி சென்ற கொள்ளையர்களின் கார் வையம்பட்டி என்னும் கிராமத்திற்கு அருகில் பிரேக் டவுன் ஆகி நின்றுவிட்டது.
இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே விரைந்து சென்ற போலீசார் வையம்பட்டி கிராமத்திற்கு விரைந்து சென்று காருடன் நின்றிருந்தவர்களை மடக்கிப் பிடித்தனர்.
குமார் (23), மாரிமுத்து (31), மணிகண்டன் (25), ஜெயபால் (35), வீரப்பன்(25) மற்றும் சிவக்குமார் (25) ஆகிய 6 கொள்ளையர்களையும் கைது செய்த போலீஸார் அவர்கள் பறித்துச் சென்ற பணத்தையும் மீட்டனர்.












Click it and Unblock the Notifications