மேட்டூர் அணை 5வது முறையாக நிரம்ப வாய்ப்பு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை இந்த ஆண்டில் 5வது முறையாக மீண்டும் நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவின் கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் கடந்த 3 மாதங்களில் மேட்டூர் அணை 4 முறை நிரம்பியது.
இங்கிருந்து திறந்துவிடப்பட்ட நீரால் காவிரி டெல்டா மாவட்டக் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
இந்நிலையில் கர்நாடகத்தில் பருவமழை மீண்டும் வலுவடைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் மேட்டூர் அணை 5வது முறையாக மீண்டும் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications