மதுரை-போலீஸ் பற்றாக்குறையுடன் காவல்நிலையம்
மதுரை:
மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பற்றாக்குறையுடன் புதிய காவல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் 2வது இடத்தில் உள்ளது மதுரை ராஜாஜி மருத்துவமனை. இங்கு பாதுகாப்பு கருதி புறக்காவல் நிலையம் சமீபத்தில் அமைக்கப்பட்டது. இந்த காவல் நிலையம் நிரந்தர காவல் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்த காவல் நிலையத்தில் 14 ஏட்டுக்கள் இருக்க வேண்டிய இடத்தில் 20 ஏட்டுக்கள் உள்ளனர். ஆனால், 16 காவலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 4 காவலர்கள் தான் உள்ளனர். இதனால் பாதுப்பணியில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கிருக்கும் அந்த 4 காவலர்களையும் வெளிப் பணிக்காக அடிக்கடி அழைத்துக் கொள்வதால் முழுமையான பாதுகாப்புப் பணியில் இந்தக் காவல் நிலையம் ஈடுபட முடியாத நிலையில் உள்ளது.
ஏட்டுக்களின் எண்ணிக்கையை குறைத்து காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா












Click it and Unblock the Notifications